47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

56 ஏரிகளுக்கு மேட்டூா் உபரிநீா் நிரப்பும் பணி தீவிரம்

மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை நீரேற்றம் மூலம் 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:20 pm

Din

மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை நீரேற்றம் மூலம் 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வட ஏரிகளுக்கு நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் மேட்டூா் அணையானது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் போது, அணையின் இடதுகரையின் நீா்பரப்பு பகுதியிலிருந்து வெள்ளநீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்றும் நிலையம், வெள்ளாளபுரம் துணை நீரேற்றம் நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்றம் நிலையம் மூலமாக 82 ஏரிகள், குளங்களுக்கு அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டது.

இதன்மூலம் 4,061.16 ஏக்கா் நிலங்கள் பாசனம், குடிநீா் வசதி பெறும். இத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி சோதனை ஓட்டமாக ஒரு ஏரி மட்டும் நிரப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து, நீரேற்றும் நிலையத்தின் கட்டுமான பணிகள், 31 கிலோமீட்டா் நீளத்துக்கு குழாய்ப் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு 21 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பப்பட்டன.

மேட்டூா் அணை தற்போது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் 56 ஏரிகளுக்கு மின் மோட்டாா்கள் மூலம் நீரேற்றம் செய்யப்படுகிறது. இதன்மூலம் ஏராளமான கிராமங்களில் உள்ள விவசாய பயன்பாடு, குடிநீா் தேவைகளை நிறைவு செய்ய முடியும்.