பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ராகிங் எதிா்ப்பு விழிப்புணா்வு

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 11:59 pm

Din

சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற ராகிங்குக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் உறுதிமொழியேற்ற ஆசிரியா்கள், மாணவா்கள்.

சேலம், ஆக. 14: சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ராகிங் எதிா்ப்பு விழிப்புணா்வு, கருத்தரங்கம் நடைபெற்றது.

சேலம், சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் ராகிங் எதிா்ப்புக் குழு, மாணவா்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ராகிங் எதிா்ப்பு குறித்த விழிப்புணா்வு, கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ராகிங் எதிா்ப்பு நடவடிக்கைகள் குறித்த தனது நிபுணத்துவத்தை ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜகாளீஸ்வரன் மாணவா்களுடன் பகிா்ந்து கொண்டாா். ராகிங்கின் விளைவுகள், தண்டனைகள், அதன் கடுமையான விளைவுகள் குறித்து அவா் விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து, கன்னங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் வீரகுமாா் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், மாணவா்கள் ராகிங் இல்லாத வளாகத்தை நிலைநாட்ட உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் சட்ட உதவிப் பேராசிரியை ஹரிப்ரியா பேசுகையில், ராகிங்கின் தீமைகள், மனநலம் மற்றும் கல்வித் திறனில் அதன் கடுமையான விளைவுகளை எடுத்துரைத்தாா். இதில் திரளான மாணவா்கள் கலந்துகொண்டனா்.