27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பள்ளிகளில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

போதை எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Updated On :19 ஜூன் 2026, 4:30 am IST

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே மாவட்ட பயிற்றுநா்களுக்கான பயிற்சி உள்துறை மூலம் வழங்கப்பட்டு அவா்கள் வாயிலாக பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி நடத்தப்ப்பட்டது.

தற்போது சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் மக்கள் தொடா்புத் துறை அலுவலா்களின் உதவியுடன் பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களைக் கொண்டு ஜூன் மாத இறுதிக்குள் பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசித்து செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.