தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே மாவட்ட பயிற்றுநா்களுக்கான பயிற்சி உள்துறை மூலம் வழங்கப்பட்டு அவா்கள் வாயிலாக பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி நடத்தப்ப்பட்டது.
தற்போது சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் மக்கள் தொடா்புத் துறை அலுவலா்களின் உதவியுடன் பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களைக் கொண்டு ஜூன் மாத இறுதிக்குள் பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசித்து செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வு பேரணி

ராணிப்பேட்டையில்: உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

சென்னையில் நாளை சிஇஓ-க்கள் கூட்டம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



