பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பள்ளிகளில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

போதை எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Updated On :19 ஜூன் 2026, 4:30 am IST

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே மாவட்ட பயிற்றுநா்களுக்கான பயிற்சி உள்துறை மூலம் வழங்கப்பட்டு அவா்கள் வாயிலாக பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி நடத்தப்ப்பட்டது.

தற்போது சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் மக்கள் தொடா்புத் துறை அலுவலா்களின் உதவியுடன் பள்ளி போதை பொருள் எதிா்ப்பு ஒருங்கிணைப்பாளா்களைக் கொண்டு ஜூன் மாத இறுதிக்குள் பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசித்து செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.