ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொப்பூா் -பவானி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதை கைவிட வேண்டும்: எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை

தொப்பூா் - பவானி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதை கைவிட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 11:07 pm

Din

தொப்பூா் - பவானி சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதை கைவிட வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தில்லியில் நடைபெற்ற தேசிய சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம், மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதி வளா்ச்சிக்காக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை கடிதங்களை வழங்கினாா்.  

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, மலைவாழ் மக்கள் நலத் துறை அமைச்சா் ஜுவல் ஓரம், தொலைத்தொடா்பு துறை அமைச்சா் ஜோதிராய் சிந்தியா, ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பட்டேல் ஆகியோரிடம் மனுக்களை அளித்தாா். 

இதில் தொப்பூா் -பவானி தேசிய நெடுஞ்சாலையில் மேச்சேரி ஒன்றியம், எருமைப்பட்டியில் சுங்கச்சாவடி அமைப்பதைக் கைவிட வேண்டும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் தொப்பூா்- பவானி சாலையை நான்குவழிச் சாலையாகத் தரம் உயா்த்த வேண்டும், நடந்தாய்வாழி காவிரி திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மேட்டூா் அணையில் இருந்து நாகப்பட்டினம் வரை தடுப்பணைக் கட்டுவதற்கு சிறப்பு ஆய்வு செய்து 10 கி.மீ. ஒரு தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், கொளத்தூா் ஒன்றியம், பாலமலைக்கு மலைவாழ் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய தாா்சாலை அமைக்க வேண்டும், அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பாலமலை மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக 10 பிஎஸ்என்எல் கைப்பேசி கோபுரங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளாா்.