சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திருச்சி - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் கோடிக்கோட்டை சுங்கச்சாவடி மின்தடையால் இருளில் மூழ்கியதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து சென்றன.
தேவகோட்டை அருகேயுள்ள கோடிக்கோட்டை சுங்கச்சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மின் இணைப்பு வரவில்லை.
மேலும், இந்த சுங்கச்சாவடியில் உள்ள ஜெனரேட்டரும் எரிபொருள் இல்லாததால் இயங்கவில்லை. இதன் காரணமாக சுங்கச்சாவடி பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
குறிப்பாக சுங்க வசூல் செய்யும் பகுதி மற்றும் அலுவலகம் முழுவதும் இருளில் மூழ்கியதால் சுங்கச்சாவடி இயங்கமுடியாமல் போனது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களும் அதிலிருந்த பயணிகளும் குழப்பமடைந்தனர். அப்பகுதி முழுவதும் இருட்டாக இருந்ததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கேட்டபோது எரிபொருள் இல்லாததால் சுங்கச்சாவடி மூடப்பட்டது எனவும், அனைத்து வாகனங்களும் கட்டணமின்றி சென்றதாகவும் தெரிவித்தார்.
Summary
The Kodikottai toll booth near Devakottai was plunged into darkness.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம்

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! இன்று நள்ளிரவு முதல் அமல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




