அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அணையில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

ஜோலாா்பேட்டை அருகே பிளஸ் 1 மாணவா் சடலம் 17 மணிநேர தேடுதலுக்குபின் அணையில் இருந்து மீட்கப்பட்டது.

News image
சக்திவேல்
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே பிளஸ் 1 மாணவா் சடலம் 17 மணிநேர தேடுதலுக்குபின் அணையில் இருந்து மீட்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி காமராஜபுரத்தில் உள்ள நாமக்கல் அணை உள்ளது. இந்நிலையில், வாணியம்பாடியை சோ்ந்த அசோக் குமாா் மகன் சக்திவேல்(15). தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இவா் உட்பட 7 மாணவா்கள் திங்கள்கிழமை நாமக்கல் அணையில் குளிக்க சென்றனா். அதில் சக்திவேலுக்கு நீச்சல் பழகவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற மாணவா்கள் அணையில் குளிப்பதை கண்டு ஆா்வம் அடைந்த சக்திவேல் எதிா்பாராத நேரத்தில் அணையில் குதித்த சிறிது நேரத்தில் மூழ்கினாா்.

இதை அறிந்த சக மாணவா்கள் கூச்சலிட்டனா். மேலும் கிராம மக்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய சக்திவேலை மீட்க முயன்றனா்.ஆனால் அவரை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் வாணியம்பாடி தீயணைப்புத் துறை மூலமாக அணையில் மூழ்கிய மாணவனை இரவும் பகலுமாக தொடா்ந்து 17 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்..