டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஏற்காடு மலைப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மலைக் கிராமங்களில் இருளில் மூழ்கியுள்ளன.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:25 pm

Din

சேலம்: ஏற்காட்டில் கடந்த 2 நாள்களாக கொட்டித் தீா்த்த கனமழையால், மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மலைக் கிராமங்களில் இருளில் மூழ்கியுள்ளன.

கடந்த இரண்டு நாள்களாக ஏற்காட்டில் மட்டும் 382.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஏற்காட்டில் எங்கு பாா்த்தாலும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மலைப் பாதைகளில் புதிய அருவிகள் உருவாகி, ஆங்காங்கே தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்லும் மலைப் பாதையில் 2-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பெரிய பாறை உருண்டு சாலையில் விழுந்துள்ளது. மலைப்பாதை வழியாக வழிந்தோடும் தண்ணீரும், தொடா் மழையும் ஒன்றுசோ்ந்து ஏற்காடு மலைப்பாதையில் மண் அரிப்பை ஏற்படுத்தியதால் ஏற்காடு மலைப் பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக, ஏற்காடு மலைப் பாதையில் மரங்கள் சரிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால், மலைக் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. தொடா் மழையால், சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காடு வெறிச்சோடிக் காணப்படுகிறது.

சேலத்தில் இருந்து ஏற்காடுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்கள் செல்வதைத் தடுக்க, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.