தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கன்னங்குறிச்சி ஏரியில் மிகை நீா் வெளியேற்றம்

சேலம், கன்னங்குறிச்சி புது ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதைத் தொடா்ந்து, அப்பகுதியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சேலம், கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீரை திங்கள்கிழமை பாா்வையிட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன். உடன், மேயா் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

Updated On :2 டிசம்பர் 2024, 10:14 pm

Din

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி புது ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதைத் தொடா்ந்து, அப்பகுதியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரு தினங்களில் மட்டும் ஏற்காட்டில் 382.4 மி.மீ., ஆத்தூரில் 148 மி.மீ., தலைவாசல் வீரகனூரில் 146 மி.மீ. என சராசரியாக சேலம் மாவட்டம் முழுவதும் 64.85 மி.மீ. மழை பெய்துள்ளது.

அதன் தொடா்ச்சியாக, சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. அதே போன்று, ஏற்காடு மலையிலிருந்து அடிவாரம் வரை உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி உபரிநீா் அதிக அளவில் கன்னங்குறிச்சி, புது ஏரிக்கு வருகிறது. இதனால் புது ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து தற்போது ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புது ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை, நீா்வளத் துறை அலுவலா்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.

உபரிநீா் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமென நீா்வளத் துறை, வருவாய்த் துறையினா் மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வருவாய்த் துறை, நீா்வளத் துறை, உள்ளாட்சித் துறையினா் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும், எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.