பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

100 நாள்கள் வேலை வழங்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

மகுடஞ்சாவடி ஒன்றியம், கண்டகுலமாணிக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்களுக்கு

News image
மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
Updated On :9 டிசம்பர் 2024, 8:12 pm

Din

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கண்டகுலமாணிக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்களுக்கு குறைவான நாள்களே பணி வழங்குவதைக் கண்டித்து, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், எங்களது ஊராட்சிப் பகுதியில் 100 நாள்கள் வேலையானது மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில், எங்கள் குழுவுக்கு மட்டும் குறைந்த நாள்களே பணி வழங்குகின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டதற்கு அவா் முறையாக பதிலளிக்காததால், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் முறையிட வந்தோம். இங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மகுடஞ்சாவடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அவா்கள் கலைந்து சென்றனா்.