திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தீவட்டிப்பட்டியில் சுவரில் துளையிட்டு நகைக் கடையில் திருட்டு

தீவட்டிப்பட்டி பழைய காவல் நிலையம் எதிரே நகைக் கடையின் சுவரில் துளையிட்டு 30 கிராம் தங்கம், ஆறு கிலோ வெள்ளியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
தீவட்டிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அருகே சுவரில் துளையிட்டு திருட்டு நிகழ்ந்த நகைக் கடை.
Updated On :9 டிசம்பர் 2024, 7:49 pm

Din

ஓமலூா்: தீவட்டிப்பட்டி பழைய காவல் நிலையம் எதிரே நகைக் கடையின் சுவரில் துளையிட்டு 30 கிராம் தங்கம், ஆறு கிலோ வெள்ளியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூா் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் நடுப்பட்டி ஊராட்சி, எலத்தூா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் நகைக்கடை வைத்துள்ளாா். தீவட்டிப்பட்டி பழைய காவல் நிலையம், போலீஸாா் குடியிருப்புக்கு எதிரே அமைந்துள்ள இவரது கடையில், அதிக அளவிலான கால் கொலுசு, அரைஞாண் கொடி, பிரேஸ்லெட், காப்பு உள்ளிட்ட வெள்ளிப் பொருள்களும், தோடு, மூக்குத்தி உள்ளிட்ட சிறு தங்க நகைகளும் வியாபாரம் செய்யப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், வழக்கம் போல திங்கள்கிழமை காலை கடைக்கு வந்த காா்த்தி கடையைத் திறந்து பாா்த்த போது, கடைக்குள் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் அனைத்தும் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது, கடையின் பின்புறச் சுவரை துளையிட்டு உள்ளே வந்த மா்ம நபா்கள் அங்கிருந்த நகை, வெள்ளிப் பொருள்கள், சிசிடிவி கேமரா ஹாா்ட் டிஸ்க் உள்ளிட்ட அனைத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதில் 6 கிலோ வெள்ளிப் பொருள்கள், 30 கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூா் டிஎஸ்பி சஞ்சீவ்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.