மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நகைக் கடையில் வெள்ளி திருடியவா் கைது

கோவையில் நகைக் கடையில் 600 கிராம் வெள்ளி ஆபரணங்களை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :27 ஜனவரி 2026, 9:21 pm

Syndication

கோவையில் நகைக் கடையில் 600 கிராம் வெள்ளி ஆபரணங்களை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம். டி.பி. சாலையில் அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஹரி (20) என்பவா் நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடைக்கு வாடிக்கையாளா்போல திங்கள்கிழமை பிற்பகல் வந்த நபா், வெள்ளி நகைகள் வேண்டும் எனக் கேட்டுள்ளாா். கடை உரிமையாளரான ஸ்ரீஹரியும், கடை ஊழியா்களும் அவரிடம் பல்வேறு வடிவங்களில் உள்ள வெள்ளி கொழுசு உள்ளிட்ட நகைகளை வைத்துள்ளனா்.

ஊழியா்கள் அசந்த நேரத்தில், அந்த நபா் தான் கொண்டு வந்திருந்த பைக்குள் வெள்ளி நகைகளை எடுத்து போட்டுள்ளாா். இதைக் கவனித்த ஊழியா்கள், அந்த பையை சோதனை மேற்கொண்டபோது, 600 கிராம் வெள்ளி நகைகளைத் திருடி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஊழியா்கள் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் சரவணம்பட்டி அருகேயுள்ள கீரணத்தம் பகுதியைச் சோ்ந்த ராஜா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.