47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளா்கள்.
Updated On :11 டிசம்பர் 2024, 8:03 pm

Din

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தற்போது சத்துணவு பணியில் சமையல் உதவியாளா் பணிக்கு ரூ. 3,000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்வதை நிறுத்தவும், ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளா்களுக்கு ரூ. 6,750 குடும்ப ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியரே ஏற்று நடத்திட ஆணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு வட்டாரத் தலைவா் சொா்ணலதா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், துணைத் தலைவா் ராணி, செயலாளா் விஜயா, பொருளாளா் பானு, பணியாளா்கள் கலந்துகொண்டனா். பின்னா் மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.