மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் ஆா்ப்பாட்டம்

பிக்கிலி ஊராட்சியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன்

News image
பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 10:14 pm

Syndication

பென்னாகரம்: பிக்கிலி ஊராட்சியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பாரப்பட்டி கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் கிளை செயலாளா்கள் எம்.தேவராஜ், கே.குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.மாதன், வே.விஸ்வநாதன் ஜி.சக்திவேல் ஆகியோா் விளக்க உரையாற்றினா். மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன் கண்டன உரையாற்றினாா்.

இதில், குறவன்திண்ணை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் நீரேற்றம் செய்து குடிநீா் வழங்க வேண்டும், கரிப்பள்ளம் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து புதிய குழாய் அமைத்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் வழங்க வேண்டும், சின்னாறு கூட்டாறு பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.சின்னசாமி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.