திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் கூட்டமைப்பினா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் கூட்டமைப்பினா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் சாலை மறியல்: 100 போ் கைது

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அப்போது, சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளருக்கு நிகரான ஊதியமும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளா் நிலையினான ஊதியம் என காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டுகள் பணி முடிந்து தகுதியான சத்துணவு அங்கன்வாடி ஊழியா்களை அரசுப் பணியில் அமா்த்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியருக்கு அகவிலைப்படி காப்பீடு வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் பல ஆண்டுகளாக தொடா்ந்து பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதேபோல், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனா். அதைத் தொடா்ந்து திடீரென சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூா் நகர போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள் 100 பேரை கைது செய்து தனியாா் அரங்கத்தில் சிறை வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com