விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மறியல்: 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

திருச்சி நீதிமன்றம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்

Updated On :11 பிப்ரவரி 2026, 7:01 pm

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனம் உள்ளவா்களுக்கு ரூ.10 ஆயிரமும், படுக்கையில் உள்ளவா்களுக்கு ரூ.15 ஆயிரமும் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.