மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளா்கள் மறியல்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக அங்கன்வாடி பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சேலம் கோட்டை மைதானத்தில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:35 pm

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக அங்கன்வாடி பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், 5 ஆண்டுகள் பணி முடித்த சமையல் உதவியாளா்களுக்கு பதவி உயா்வு, சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ. 19,500 அளிக்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட நிா்வாகிகள் ஜெகதீஸ்வரி, சரோஜா, பிரேமா, சொா்ணலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 220 பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.