47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நெகிழி பைகள் பறிமுதல் செய்து அழிப்பு

ஆத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பனை செய்த கடைகளில் அபராதம் விதித்து, பறிமுதல் செய்த நெகிழி பைகளை அழித்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:07 pm

Din

ஆத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பனை செய்த கடைகளில் அபராதம் விதித்து, பறிமுதல் செய்த நெகிழி பைகளை அழித்தனா்.

ஆத்தூா் வணிக நிறுவனங்களில் அதிக அளவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பதும், உபயோகப்படுத்துவதும் தெரியவந்தது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், தொடா்ந்து அதனை விற்று வந்துள்ளனா்.

இதனையடுத்து, நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் உத்தரவின் பேரில், துப்புரவு அலுவலா் பழனிசாமி, ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு கடையில் நெகிழி பைகள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த சுமாா் 1 டன் நெகிழி பைகளை பறிமுதல் செய்த அலுவலா்கள், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா். நகராட்சி ஆணையா் அதனை பாா்வையிட்டு நெகிழி பைகளை அழிக்க உத்தரவிட்டாா்.