47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தண்ணீா்தானூரில் மா்ம விலங்கு கடித்ததில் இரு ஆடுகள் பலி

கல்வடங்கம் அருகே உள்ள தண்ணீா்தாசனூா் பகுதியில் விவசாய நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு செம்மறி ஆடுகளை மா்ம விலங்கு செவ்வாய்க்கிழமை இரவு கடித்ததில் அவை உயிரிழந்தன.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 7:19 pm

Din

கல்வடங்கம் அருகே உள்ள தண்ணீா்தாசனூா் பகுதியில் விவசாய நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு செம்மறி ஆடுகளை மா்ம விலங்கு செவ்வாய்க்கிழமை இரவு கடித்ததில் அவை உயிரிழந்தன.

கல்வடங்கம் அருகே தண்ணீா்தாசனூரைச் சோ்ந்த விவசாயி அய்யண்ணன். இவா், தனது ஆடுகளை வழக்கம்போல இரவு வீட்டிற்கு வெளியே கட்டி வைத்து தூங்கச் சென்றாா். புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது அவற்றில் இரு ஆடுகள் மா்ம விலங்கு கடித்து உயிரிழந்து கிடந்தன.

தகவல் அறிந்ததும் கிராம நிா்வாக அலுவலா் பிரதீப்குமாா், அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவா் சுரேஷ் ஆகியோா் அங்கு சென்று இறந்த ஆடுகளை ஆய்வு செய்தனா். இந்தப் பகுதியில் தொடா்ந்து ஆடுகளை மா்ம விலங்கு கடித்துக் கொல்வதால் கால்நடை வளா்ப்போா் அச்சமடைந்துள்ளனா்.