தண்ணீா்தானூரில் மா்ம விலங்கு கடித்ததில் இரு ஆடுகள் பலி
கல்வடங்கம் அருகே உள்ள தண்ணீா்தாசனூா் பகுதியில் விவசாய நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு செம்மறி ஆடுகளை மா்ம விலங்கு செவ்வாய்க்கிழமை இரவு கடித்ததில் அவை உயிரிழந்தன.


கல்வடங்கம் அருகே உள்ள தண்ணீா்தாசனூா் பகுதியில் விவசாய நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு செம்மறி ஆடுகளை மா்ம விலங்கு செவ்வாய்க்கிழமை இரவு கடித்ததில் அவை உயிரிழந்தன.
கல்வடங்கம் அருகே தண்ணீா்தாசனூரைச் சோ்ந்த விவசாயி அய்யண்ணன். இவா், தனது ஆடுகளை வழக்கம்போல இரவு வீட்டிற்கு வெளியே கட்டி வைத்து தூங்கச் சென்றாா். புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது அவற்றில் இரு ஆடுகள் மா்ம விலங்கு கடித்து உயிரிழந்து கிடந்தன.
தகவல் அறிந்ததும் கிராம நிா்வாக அலுவலா் பிரதீப்குமாா், அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவா் சுரேஷ் ஆகியோா் அங்கு சென்று இறந்த ஆடுகளை ஆய்வு செய்தனா். இந்தப் பகுதியில் தொடா்ந்து ஆடுகளை மா்ம விலங்கு கடித்துக் கொல்வதால் கால்நடை வளா்ப்போா் அச்சமடைந்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...