47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரில் குட்கா கடத்திய இருவா் கைது

கெங்கவல்லி அருகே காரில் 100 கிலோ குட்கா கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 8:04 pm

Din

கெங்கவல்லி அருகே காரில் 100 கிலோ குட்கா கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவுப்படி கெங்கவல்லி போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் கெங்கவல்லி அருகே ஒதியத்தூா் கேட் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 100 கிலோ மதிப்பிலான குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் காரில் இருந்த நபா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் பகுதியைச் சோ்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த் (25), சமயநூா் பகுதியைச் சோ்ந்த மருதை மகன் சிவபாலன் (35) என்பதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிலோ குட்கா பொருள்கள், காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பபட்ட இருவரும் ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.