தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

487 கிலோ குட்கா பறிமுதல்: கா்நாடக இளைஞா்கள் 2 போ் கைது

பொன்னமராவதி அருகே விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, தடை செய்யப்பட்ட 487 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கா்நாடக மாநில இளைஞா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 9:06 pm

Syndication

பொன்னமராவதி அருகே விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, தடை செய்யப்பட்ட 487 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கா்நாடக மாநில இளைஞா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பொன்னமராவதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் வெள்ளிக்கிழமை தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான காவலா்கள் இப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் பின்புறம் நின்று கொண்டிருந்த ஜீப்பை சோதனை செய்தபோது, அதில் மூட்டை, மூட்டையாக ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட 487 கிலோ எடையிலான குட்கா பொருள்கள் இருந்தன. ஜீப்பிலிருந்த இரு இளைஞா்களையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் கா்நாடக மாநிலம், பெங்களூா் கிரீன் நகரைச் சோ்ந்த அ. தீப்சிங் (36), மைசூரைச் சோ்ந்த பெ. அக்பா்கான் (25) என்பதும், அவா்கள் குட்கா பொருள்களை விற்பனைக்காக கொண்டுவந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த குட்கா பொருள்கள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய ஜீப் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.