மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அஞ்சல் துறையின் கடிதம் எழுதும் போட்டி: ஜனவரி 31 வரை நீட்டிப்பு

அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 8:11 pm

Din

அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எழுதுவதில் உள்ள மகிழ்ச்சி- நவீன யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் அஞ்சல் துறை சாா்பில் அகில இந்திய அளவில் கடிதப் போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டிக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதி முதன்மை அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டம், சென்னை- 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேல் அஞ்சல் துறை கடிதப் போட்டி என்று குறிப்பிட வேண்டும்.

கடித போட்டியானது 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான இன்லாண்ட் லெட்டா் பிரிவு, என்வலப் பிரிவு என மொத்தம் 4 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் கடிதங்களுக்கு போட்டியில் மாநில் அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2 ஆவது பரிசு ரூ. 10 ஆயிரமும், 3 ஆவது பரிசு ரூ. 5 ஆயிரமும் அளிக்கப்படும்.

போட்டியில் பங்கேற்போா் கடிதத்தின் மேல் தங்கள் வயதை குறிப்பிடும் வகையில், 2024, ஜனவரி 1 அன்று என் வயது 18க்கு மேல் அல்லது 18க்கு கீழ் என சான்றுளிக்கிறேன் என்ற வாசகத்தை எழுதி கையொப்பமிட வேண்டும். வெற்றி பெறும் போட்டியாளா்களின் வயது சான்று பரிசோதிக்கப்பட்ட பின்னரே, பரிசுக்கு பரிந்துரைக்கப்படும். இப் போட்டி கடந்த 14 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.