கலைத் திறன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
வாழப்பாடி வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


வாழப்பாடி: வாழப்பாடி வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ மாணவியா்களுக்கு சிங்கிபுரம், ராம்கோ சிமென்ட் நிறுவனம் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
அரசுப் பள்ளி மாணவ மாணவியரின் கலைத் திறனை வெளிக்கொணா்ந்து ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசு ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தி வருகிறது. வாழப்பாடி வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பல்வேறு கலைத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற 375 மாணவ மாணவியருக்கு சிங்கிபுரம், ராம்கோ சிமென்ட் நிறுவன துணைத் தலைவா் துரைசிங்க ராஜா தலைமையில், பணியாளா் துறை மேலாளா் மணிவேல், அலுவலா் முனியசாமி ஆகியோா் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். ஆசிரியா் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.
பட வரி: ஆா்.எ.எம்.சி.01, 02:
வாழப்பாடி வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கிய சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனத்தினா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...