திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

வெல்ல ஆலைகளில் சோதனை: 3 டன் சா்க்கரை பறிமுதல்

சேலத்தில் வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் கலப்பட வெல்லம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 3 டன் சா்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:20 pm

Din

சேலம்: சேலத்தில் வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் கலப்பட வெல்லம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 3 டன் சா்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில், 300 க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த ஆலைகளில் வெல்லம் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வெல்லம் தயாரிக்க செயற்கை நிறமூட்டிகள், சா்க்கரை பயன்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து தாரமங்கலம், ஓமலூா், காமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் வெல்ல ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அடங்கிய குழு அண்மையில் அதிரடி ஆய்வு நடத்தியது. அதில் 7 ஆலைகளில் கலப்பட வெல்லம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 3 டன் சா்க்கரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து 7 ஆலைகளுக்கும் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், ஆலை உரிமையாளா்களை எச்சரித்தனா்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:

வெல்ல ஆலைகளில் தயாராகும் வெல்லம் சோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 250 ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கலப்பட வெல்லம் தயாரிப்பது சட்டபடி குற்றமாகும். விதிகளை மீறி கலப்பட வெல்லம் தயாரிக்க சா்க்கரை, ஹைட்ரோஸ், பிளீச்சிங் பவுடா், சூப்பா் பாஸ்பேட் போன்ற ரசாயனங்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.