அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன். மேட்டூா், பிப். 17: மேச்சேரி கிழக்கு ஒன்றிய அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் எமரால்டு வெங்கடாஜலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழக பேச்சாளா் பழக்கடை மூா்த்தி சிறப்புரையாற்றினாா். இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் பேசியதாவதூ: மேட்டூா் அணை நிரம்பி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை ஏழை விவசாயிகளின் பயன்பாட்டுக்காகவும், சேலம் மாவட்ட மக்களின் குடிநீா்ப் பிரச்னைகளைத் தீா்க்கவும் உபரிநீா் திட்டம் மூலம் 100 ஏரிகளை நிரப்பியவா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி. மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வு காண்பவா் அவா் என்றாா். இந்தக் கூட்டத்தில், ஜெ பேரவை மாநில துணைச் செயலாளா் கே.கலையரசன், மேற்கு ஒன்றியச் செயலாளா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்குகளை எண்ணும் பணியாளா்களுக்குப் பயிற்சி

பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை: மேதினிப்பூரில் மமதா!

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நெல்லையில் காவல் துறை ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

