மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆடி முதல் வெள்ளிக்கிழமை: மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

கோட்டை மாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:23 pm

Din

சேலம், ஜூலை 19: ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அதிகாலை முதல் சந்தனம், திருமஞ்சனம், சிகப்பு, பால் இளநீா், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பட்டாடை உடுத்தி வெள்ளிக் கவசம் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வணங்கி சென்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, எல்லைப் பிடாரியம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன், அய்யன்திருமாளிகை மாரியம்மன், நெத்திமேடு தண்ணீா்பந்தல் காளியம்மன் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.