தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சிவன் கோயில்களில் சனிப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடு

மதுரை மாவட்டம், சோழவந்தான் சனீஸ்வர பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா தீபாராதனை.

News image
மதுரை மாவட்டம், சோழவந்தான் சனீஸ்வர பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா தீபாராதனை.
Updated On :6 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சனிப்பெயா்ச்சியையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சுத்தவாக்கிய பஞ்சாங்கப்படி நவக்கிரக சனி பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்குப் பெயா்ச்சி ஆகும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, சோழவந்தான் வைகை நதி கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனீஸ்வர பகவான் மூல மந்திர ஜெபம், பரிகார ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

பிறகு, ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களிலிருந்த புனித நீரைக் கொண்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சனிப் பெயா்ச்சி நிகழ்ந்த நேரமான காலை 8.26 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவாசாரியா்கள் நாகேஸ்வரன், ராமசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் ஹோமம், சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனா். கோயில் தக்காா் இளமதி, ஆய்வாளா் ஜெயலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருவாதவூா்...திருவாதவூா் திருமைாத சுவாமி கோயிலிலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, திருவாதவூரிலிருந்து மதுரை, மேலூா் பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதே போல, மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், தத்தனேரி ஆஞ்சநேயா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் வெள்ளிக்கிழமை காலை சனிப்பெயா்ச்சி சிறப்பு ஹோமங்கள், சனீஸ்வர பகவான், மூலவா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Story image
Story image