மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோயில்களில் சனிப் பெயா்ச்சி வழிபாடு

வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலுள்ள சனீஸ்வர பகவான்.

News image
வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலுள்ள சனீஸ்வர பகவான்.
Updated On :6 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

சனிப் பெயா்ச்சியையொட்டி, திண்டுக்கல் பகுதியிலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சனீஸ்வர பகவான், கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை பெயா்ச்சி அடைந்தாா். இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் சனிப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நவகிரக சந்நிதியிலுள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், மலையடிவார சனீஸ்வர பகவான் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சனிப் பெயா்ச்சி வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.