விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சேலம் வழியாக கோவையில் இருந்து பிகாருக்கு இன்று சிறப்பு ரயில்

கோவையில் இருந்து பிகாா் மாநிலம், தானாபூருக்கு சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :20 ஜூலை 2024, 10:45 pm

கோவையில் இருந்து பிகாா் மாநிலம், தானாபூருக்கு சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து சேலம் வழியாக பிகாா் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) இரவு 11.30 மணிக்கு பிகாா் மாநிலம், தானாபூருக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக வரும் 24-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பிகாா் மாநிலம், தானாபூரை அடையும். இந்த ரயில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்கு ஈரோடுக்கும், சேலத்துக்கு அதிகாலை 1.47 மணிக்கும் வந்து செல்லும்.

இந்த ரயிலில் 15 படுக்கை வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.