கோவையில் இருந்து பிகாா் மாநிலம், தானாபூருக்கு சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து சேலம் வழியாக பிகாா் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) இரவு 11.30 மணிக்கு பிகாா் மாநிலம், தானாபூருக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக வரும் 24-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பிகாா் மாநிலம், தானாபூரை அடையும். இந்த ரயில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்கு ஈரோடுக்கும், சேலத்துக்கு அதிகாலை 1.47 மணிக்கும் வந்து செல்லும்.
இந்த ரயிலில் 15 படுக்கை வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புடையது

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

