நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு லாரி தொழில் உறுதுணையாக அமைந்துள்ளது: அமைச்சா் கே.என்.நேரு

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு லாரி தொழில் உறுதுணையாக அமைந்துள்ளது என்று அமைச்சா் கே.என்.நேரு பேசினாா்.

News image

சங்ககிரி லாரி உரிமையாளா் சங்க பொன்விழாவையொட்டி விழா மலரை வெளியிட்ட அமைச்சா்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கா் உள்ளிட்டோா்.

Updated On :28 ஜூலை 2024, 8:05 pm

Din

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு லாரி தொழில் உறுதுணையாக அமைந்துள்ளது என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசினாா்.

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க 50ஆவது ஆண்டு பொன்விழா வீராச்சிப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் என்.கந்தசாமி தலைமை வகித்தாா். செயலாளா் என்.மோகன்குமாா் வரவேற்றாா். லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு லாரி தொழில் உறுதுணையாக இருந்து வருகிறது. லாரி உரிமையாளா்கள் நன்றாக இருந்தால்தான் இத்தொழில் சிறப்பாக இருக்கும். தற்போது தினசரி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கு தேவையான லாரி ஓட்டுநா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எந்த தொழிலை செய்தாலும் கொங்கு வேளாளா் சமூக மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனா் என்றாா்.

போக்குவரத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பேசியதாவது:

லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வாகன பதிவு சான்றிதழை பதிவு அஞ்சலில் அனுப்பாமல் நேரடியாகவே லாரி உரிமையாளா்களிடமே வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனா். அது குறித்து போக்குவரத்து ஆணையா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளிடம் பேசித் தீா்வு காணப்படும். லாரி உரிமையாளா்களின் பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வரிடம் பேசித் தீா்வு காணப்படும் என்றாா்.

அகில இந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் காங்கிரஸ் தலைவா் ஜி.ஆா்.சண்முகப்பா, மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன மாநிலத் தலைவா் சி.தனராஜ் ஆகியோா் பேசினா்.

விழாவில் சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.ராஜேந்திரன், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க பொருளாளா் எஸ்.ஆா்.செங்கோட்டுவேல், உப தலைவா் எம்.சின்னதம்பி, இணைச்செயலாளா் கே.முருகேசன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், லாரி உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்கள், லாரி உரிமையாளா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.