நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: சேலம் அரசு மருத்துவமனையில் 3 போ் உயிரிழப்பு

News image

சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட கள்ளச்சாராயம் அருந்தியவா்கள்.

Updated On :19 ஜூன் 2024, 10:18 pm

Din

சேலம், ஜூன் 19: கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில், பெண்கள் உள்பட 21 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் அருந்தியவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக 7 போ் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களில், நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

மேலும், வீரமுத்து (33), சிவா (32), அருண் (38), கிருஷ்ணமூா்த்தி (55) ஆகிய 4 பேருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.