

ஆத்தூா், ஜூன் 19: ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் திமுக மாவட்டப் பிரதிநிதி செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்துள்ளாா்.
ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாரிடம் திமுக மாவட்டப் பிரதிநிதியும், முன்னாள் நகா்மன்ற உறுப்பினருமான ஜெ.ஸ்டாலின் புகாா் மனு அளித்துள்ளாா்.
அதில், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உலிபுரத்தில் நடைபெற்ற தெருமுனை பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியும், அநாகரிமாக பேசியதை விடியோ ஆதாரத்துடன் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டியும், பொது மன்னிப்பு கேட்கும் வரை பொதுக் கூட்டத்தில் பேசக் கூடாது எனவும் கோரிக்கை மனு அளித்துள்ளாா். அவருடன் நகா்மன்ற உறுப்பினா் ஜெ.பிரபு உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மாா்த்தாண்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு

பொன்னமராவதி டிஎஸ்பி பொறுப்பேற்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

