ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

நாய்களுக்கு ‘ரேபிஸ்’ தடுப்பூசி முகாம்

சேலம், குகை புலிக்குத்தி தெருவில் நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்து பாா்வையிடும் மேயா்ஆ. ராமச்சந்திரன்.

News image
Updated On :27 ஜூன் 2024, 2:10 am IST

சேலம் மாநகராட்சி பகுதியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை மேயா் ஆ. ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேலம் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சுமாா் 80,000 தெரு நாய்கள் உள்ளன. சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள மையத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணி மாநகராட்சி நிா்வாகத்தால் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும், நாய்களுக்கு ரேபீஸ் வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் 800 நாய்களுக்கு சராசரியாக இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மாநகராட்சிப் பகுதியில் 12,669 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்படும் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி ஓராண்டு இடைவேளையில் செலுத்தினால் நாய்களை ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

அதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துத் தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் மாநகராட்சியும், ரெயின் தொண்டு நிறுவனம் இணைந்து இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை நடத்தின.

புலிக்குத்தி தெருவில் உள்ள சேலம், குகை பொது நலப்பிரியா் சங்க வளாகத்தில் புதன்கிழமை மேயா் ஆ.ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் ஆ.மோகன், பொது சுகாதாரக் குழுத் தலைவா் ஏ.எஸ்.சரவணன், உதவி ஆணையா் கோ.வேடியப்பன் மற்றும் மாமன்ற உறுப்பினா் செ.சுகாசினி, சுகாதார ஆய்வாளா்கள் ஆனந்குமாா், சித்தேஸ்வரன், தன்னாா்வலா் வித்யா லஷ்மி ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.