ஆத்தூா்: ஏத்தாப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவா்கள் சோ்க்கை திருவிழா மாவட்டக் கல்வி அலுவலா் சந்தோஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ஜெயக்குமாா் வரவேற்றுப் பேசினாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜெயலட்சுமி, கலாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏத்தாப்பூா், ஓலப்பாடி, படையாட்சியூா், கல்லேரிப்பட்டி, அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் காலணி ஆகிய பள்ளிகளில் முதல் வகுப்பிற்கு சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா்களை மாலை, கிரீடம், எழுதுபொருள்கள் அளித்த வரவேற்றனா். மேலும் 53 வகையான மாணவா் நலத் திட்டங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனா். இதனைப் பெற்றோா் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்த்து பயன்பெற வேண்டுமென மாவட்டக் கல்வி அலுவலா் கேட்டுக் கொண்டனா். இந் நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சத்யா, இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் ஜோசப்ராஜ், தன்னாா்வலா்கள் திரளாக கலந்து கொண்டனா். பட்டதாரி ஆசிரியா் பாண்டியன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

அரசுப் பள்ளிகளில் சோ்க்கை தீவிரம்: கோவை கல்வி மாவட்ட அளவில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்ப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


