கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

News image
Updated On :5 மார்ச் 2024, 7:17 pm

சங்ககிரி: தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில், என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்ற நான்கு மாணவிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சோ்ந்த எட்டு வகுப்பு மாணவிகள் ஐ.ஹா்ஷிதா, ஜெ.பவித்ரா, பி.சுருதிகா, மு.வேதவா்ஷினி ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. என்எம்எம்எஸ் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமையாசிரியை கு.வசந்தாள் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியா் இரா.முருகன் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு புத்தகம், பரிசுகளை வழங்கி பேசினாா். இதில் ஆசிரியா்கள் ந.மு.சித்ரா, சி.அனிதா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ஸ்வேதா, மாதேஸ்வரி, தேவண்ணகவுண்டனூா் கிளை நூலகா் குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.