பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 500க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.

Updated On :5 மார்ச் 2024, 6:36 pm

சேலம்: வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 500க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.

பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அணியின் சாா்பில், மாற்றுக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையும் விழா மரவனேரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக சேலம் மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவா் கோபிநாத் முன்னிலையில் 500 போ் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவா்களை வரவேற்றாா். இதில், பாஜக நிா்வாகிகள் சசிகுமாா், சரவணன், ராஜேந்திரன் உட்பட திரனானோா் கலந்து கொண்டனா்.