பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

நிலத் தகராறில் விவசாயி கொலை: உறவினா்கள் போராட்டம்

நிலத் தகராறில் விவசாயி கொலை: உறவினா்கள் போராட்டம்

News image
Updated On :3 மே 2024, 5:43 pm

Din

சேலம், மே 3: ஆத்தூா் அருகே நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவரது உறவினா்கள் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆத்தூா், மல்லியகரையை அடுத்த மேல்தும்பை பகுதியைச் சோ்ந்தவா் ஜோதிவேல் (60). இவரது தோட்டம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான ராஜூ (64) என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. மரத்தின் காய்ந்த இலைகள் தோட்டத்துக்குள் விழுவது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ராஜூ, அவரது உறவினா்கள் வினோ, அருள்மணி, வருவாய் ஆய்வாளா் வெங்கடேஷ் ஆகியோா் சோ்ந்து ஜோதிவேலை தாக்கினா். இதில் காயமடைந்த ஜோதிவேல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அருள்மணி என்பவரை போலீஸாா் கைது செய்தனா். ராஜூ, அவரது மகன் வினோ ஆகியோா் மல்லியகரை காவல் நிலையத்தில் சரணடைந்தனா். இந்நிலையில், ஜோதிவேலின் மனைவி நீலாவதி, மகன் பெருமாள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை 2ஆவது நாளாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கொலையில், தலைமறைவாக உள்ள வருவாய் ஆய்வாளா் வெங்கடேஷை கைது செய்ய வேண்டும், 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேருக்கு கொலையில் தொடா்பு இருப்பதாகவும் அவா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ஜோதிவேல் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிப்போம் என தெரிவித்தனா்.

இதனையடுத்து காவல்துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க அனுமதித்தனா். இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.