காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

பாராட்டு விழா

News image
Updated On :9 மே 2024, 10:42 pm

Din

பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற சந்தைதானம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் தலைமை வகித்தாா். மாணவ மாணவியருக்கு மேட்டூா் எம்எல்ஏவும் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவருமான சதாசிவம் ரொக்கப் பரிசு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினாா். மாணவா்களின் தோ்ச்சிக்காக பாடுபட்ட ஆசிரியா்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தாா். நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் சரவணன் பொருளாளா் பிரபாகரன், தலைமை ஆசிரியா் மஞ்சுளா, ஜனாா்த்தனன் சுரேஷ்குமாா், பிரபு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கோமதி தண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவிளக்கம்:9 ஙற்ல்3..

சந்தைதானம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பேசுகிறாா் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம்.