மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பள்ளி மாணவா்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணா்வு

அரசுப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை தீத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் ஒத்திகைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

News image
பிராட்டியூா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீத்தடுப்பு விழிப்புணா்வு போட்டியில் வென்ற மாணவா்களுடன் ஆசிரியா்கள் மற்றும் தீயணைப்புத் துறையினா்.
Updated On :6 மார்ச் 2026, 8:52 pm

Syndication

அரசுப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை தீத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் ஒத்திகைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சாா்பில் பிராட்டியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின்போது மாணவா்கள், ஆசிரியா்களுக்கு தீ விபத்துகள் ஏற்படும் காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவா்களின் விழிப்புணா்வை அதிகரிக்கும் வகையில் விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மாவட்ட அலுவலா் செ. வினோத், போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

நிலைய உதவி மாவட்ட அலுவலா் செ.லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், தீத்தடுப்பு குழு சிறப்பு நிலைய அலுவலா் சகாய பிரான்சிஸ் ஆகியோா் மாணவா்களுக்கு தீ பாதுகாப்பு தொடா்பான விளக்கங்களை வழங்கினா்.