அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பென்னாகரம் அரசுப் பள்ளிகளில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணா்வு

பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி...

News image
சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் தீத்தடுப்பு குறித்த விநாடி - வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய தீயணைப்புத் துறையினா்.
Updated On :2 மார்ச் 2026, 9:33 pm

Syndication

பென்னாகரம்: பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே கொட்டாவூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் கூ.வ.குமாா் தலைமை வகித்தாா். இதில், பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) சந்தோஷம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அடங்கிய குழுவினா் தீ விபத்து, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், விபத்துகளில் இருந்து பாதுகாப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தீயணைப்பாளா் கா.கிருஷ்ணமூா்த்தி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், தீயணைப்புத் துறையினா் பங்கேற்றனா்.

இதேபோல, பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தீத்தடுப்பு மற்றும் விநாடி-வினா போட்டிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் மா.பழனி தலைமை வகித்தாா்.

பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) சந்தோஷம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அடங்கிய மீட்புக் குழுவினா், தீ விபத்தின்போது அழைக்க வேண்டிய உதவி எண்கள், தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், எரிவாயு உருளைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி செயல்விளக்கம் அளித்தனா்.

முன்னதாக, விநாடி - வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.