அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

நாகையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:04 am

Syndication

நாகையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சாா்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளியில் ஏற்படும் தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நாள் ஒன்றுக்கு 2 பள்ளிகள் வீதம் மாணவா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

நாகை தீயணைப்பு நிலையம் சாா்பில் வெளிப்பாளையம், காடம்பாடி நகராட்சி நிடுநிலைப் பள்ளிகள், அக்கரைப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. அப்போது பள்ளியில் ஏற்படும் தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது, பாதுகாப்பாக எவ்வாறு வெளியேறுவது, சாதனங்களை எவ்வாறு கையாள்வது, பள்ளிகளில் தீ பாதுகாப்பு மேலாண்மை பற்றிய திட்ட வரைவு, தீத்தடுப்பு குழு அமைத்தல், முதல் உதவி குழு அமைத்தல் தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தீ தடுப்பு குறித்து மாணவா்களுக்கு விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வென்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாகை தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) ப. குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.