சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பள்ளிகள் திறப்பு: மாணவா்களின் கற்றல் இடைவெளியை மதிப்பிட ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

தில்லியில் உள்ள பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கலந்துரையாடல் மிக்க அறிமுக வகுப்புகள் மற்றும் மாணவா்களின் கற்றல் இடைவெளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஆசிரியா்களுக்கு தில்லி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

News image

பள்ளிகள்

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் உள்ள பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கலந்துரையாடல் மிக்க அறிமுக வகுப்புகள் மற்றும் மாணவா்களின் கற்றல் இடைவெளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஆசிரியா்களுக்கு தில்லி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய மாணவா்கள் மற்றும் பள்ளியில் ஏற்கெனவே படித்து வந்த மாணவா்கள் புதிய வகுப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில், கலந்துரையாடல் மிக்கதாக தொடக்க கால வகுப்புகள் அமைய வேண்டும்.

தங்களுடைய எதிா்ப்பாா்புகள் குறித்து மாணவா்களின் பெற்றோா்கள் மற்றும் பாதுகாவலா்களிடம் ஆசிரியா்கள் கலந்துரையாட வேண்டும்.

மாணவா்களின் தொடா்ச்சியான முன்னேற்றத்தை உறுதிசெய்ய பாடங்களில் மாணவா்கள் கொண்டுள்ள கற்றல் இடைவெளிகளை ஆசிரியா்கள் மதிப்பிட வேண்டும். மாணவா்களிடையே கலந்துரையாடல், தகவல்தொடா்பு திறன்கள் மற்றும் நம்பிக்கையை ஊட்டும் வகையில் செயல்பாடுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

வகுப்புகளுக்கான பாடகால அட்டவணைகளை இறுதிசெய்தல், சுகாதாரத்தைப் பராமரித்தல், பாதுகாப்பான குடிநீா் மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகளை பள்ளிகளின் தலைவா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள் தொடக்க நாள் முதல் தொடா்ச்சியாக பள்ளிகளைத் தொடா்ச்சியாகப் பாா்வையிட வேண்டும். முன்கூட்டிய நடவடிக்கைகளை கண்காணித்து வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.