வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வெள்ளி வியாபாரி வீட்டில் நகை திருட்டு வழக்கில் மூவரிடம் விசாரணை

வெள்ளி வியாபாரி வீட்டில் நகை திருட்டு வழக்கில் மூவரிடம் விசாரணை

News image
Updated On :9 மே 2024, 10:35 pm

Din

சேலம், மே 9: சேலத்தில் வெள்ளி வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவத்தில் வீட்டு பணிப்பெண் உள்பட மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், அம்மாபேட்டை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரோஜா (59). இவா், கடந்த 2 ஆம் தேதி சங்கா் நகரில் உள்ள மகள் பிரியா வீட்டுக்குச் சென்றிருந்தாா். அப்போது, இவரது வீட்டுக்குள் புகுந்த மா்மநபா்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ரூ. 65 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றனா். வீட்டில் இருந்த 10 கிலோ வெள்ளிப் பொருள்களையும் அந்தக் கும்பல் திருடிச் சென்றது.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சரோஜா தில்லியில் உள்ள தனது பூா்வீக சொத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்று, அந்தப் பணத்தை வட்டிக்குக் கொடுத்துவந்தாா். இதை அறிந்த வீட்டில் வேலை செய்த பணிப்பெண் வள்ளி என்பவா் உள்பட சிலா் இந்தத் திருட்டு சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக போலீஸாா் சந்தேகிக்கின்றனா். திருட்டு சம்பவத்தில் அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்ய முயற்சித்து வருவதாகவும், குற்றவாளியை நெருங்கிவிட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.