நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெரியாா் பல்கலை.யில் இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம் தொடக்கம்

பெரியாா் பல்கலை.யில் இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம் தொடக்கம்

News image

பெரியாா் பல்கலைக்கழக இளம் விஞ்ஞானி பயிற்சி முகாமில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியா்.

Updated On :20 மே 2024, 10:02 pm

Din

ஓமலூா்: சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இளம் விஞ்ஞானி உண்டு உறைவிட பயிற்சி முகாம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சாா்பில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 15 நாள்களுக்கு இளம் விஞ்ஞானி உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. கலை, அறிவியல் படிப்புகள் குறித்த தெளிவினை பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவியா் அறிந்து கொள்ளும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

தொடக்க விழாவுக்கு, தோ்வாணையா் எஸ்.கதிரவன் தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியா் ஆா்.சுரேஷ் வரவேற்றாா். உண்டு உறைவிட முகாமைத் தொடங்கி வைத்து பேசிய பதிவாளா் விஸ்வநாதமூா்த்தி, அரசு ஏற்படுத்தியுள்ள வாய்ப்பினை முழுமையாக பள்ளி மாணவ, மாணவியா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முகாமில், அளிக்கப்பட உள்ள பயிற்சிகள் குறித்து உதவிப் பேராசிரியா் எம்.சூா்யகுமாா் பேசினாா். உதவிப் பேராசிரியா் ஏ.மருதுபாண்டியன் நன்றி கூறினாா்.

இந்தப் பயிற்சி முகாமில் சேலத்தைச் சோ்ந்த 40 போ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 40 போ் என அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் 80 பேருக்கு உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 15 நாள்கள் நடைபெறும் முகாமில் கலை, அறிவியல் பட்டப் படிப்புகள், அவற்றை பயில்வதற்கான நடைமுறைகள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளா் இணைப் பேராசிரியா் பிரகாஷ் மாறன் தெரிவித்தாா்.