தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை பணியாளா்கள் சங்கு ஊதி ஆா்ப்பாட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் சங்கத்தினா் சங்கு ஊதி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:03 pm

Din

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் சங்கத்தினா் சங்கு ஊதி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்ட அலுவலகம் முன்பு மண்டல அளவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சாலை பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், கிராமப்புற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பைப் பறிக்கக் கூடாது, 4,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நீக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின்போது சங்கு ஊதி நூதன முறையில் தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சுரேஷ், மாநிலச் செயலாளா் சு.செந்தில்நாதன், கலைவாணன், அந்தோணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.