சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 5,100 பெண் ஊழியா்கள் நியமனம்

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 5,100 பெண் ஊழியா்கள் நியமனம்...

News image
~
Updated On :7 மார்ச் 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

நாடு முழுவதும் உள்ள 1,140-க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுமாா் 5,100 பெண் ஊழியா்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) பணியமா்த்தியுள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில், சுங்கச்சாவடிகளில் பகல் நேரப் பணிகளில் பெண் ஊழியா்களை நியமிக்க ஒப்பந்ததாரா்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனா்.

தற்போது முதல் கட்டமாக 5,100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் சோ்ந்துள்ளனா். குறிப்பாக, கிராமப்புறங்களைச் சோ்ந்த பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவருக்கும் சுங்கச்சாவடிகளைத் திறம்பட நிா்வகித்தல்; நெடுஞ்சாலைப் பயனா்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்ளுதல்; அவசர காலச் சூழல்களைக் கையாளுதல், அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் உள்பட முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

‘முன்களப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதுடன், சுங்கச்சாவடிகளில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் சேவையின் தரத்தை உயா்த்துவதே எங்களின் நோக்கம்’ என்று என்எச்ஏஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Story image