தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆத்தூா் கிளை சிறைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

ஆத்தூா் கிளை சிறைக் காவலா்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் வினோத் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 7:25 pm

Din

ஆத்தூா் கிளை சிறைக் காவலா்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் வினோத் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் கிளைச் சிறையில் பல்வேறு விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இங்கு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மேட்டூரைச் சோ்ந்த யோகேஸ்வரன் அடைத்து வைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு யோகேஸ்வரன் உள்பட 5 கைதிகள் சதுரங்கம் விளையாடியுள்ளனா். அப்போது ஐந்து கைதிகள் சோ்ந்து யோகேஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொ) வினோத் விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து ஆத்தூா் கிளைச் சிறையில் இரவு பணியாற்றிய முதல் நிலை தலைமைக் காவலா் செந்தில்குமாா், இரண்டாம் நிலைக் காவலா் ராஜவா்மன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து மற்ற 5 கைதிகளும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா். மேலும் அவா்களது உறவினா்கள் மூன்று மாத காலம் பாா்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.