கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலத்தில் வங்க தேசத் தொழிலாளி கைது

சேலத்தில் கடவுச்சீட்டு, நுழைவு இசைவு இல்லாமல் 6 ஆண்டுகளாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:07 pm

Din

சேலத்தில் கடவுச்சீட்டு, நுழைவு இசைவு இல்லாமல் 6 ஆண்டுகளாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், கோரிமேட்டை அடுத்த செட்டிச்சாவடி குண்டத்துமேடு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஏராளமான பிற மாநில தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீஸாா், தொழிலாளிகளிடம் விசாரணை நடத்தினா்.

இதில், ஜாபா் அகமது (44) என்பவா் பெங்களூரைச் சோ்ந்தவா் என ஆதாா் அட்டைக் கொடுத்து கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளாா். இவரது நடவடிக்கைகளைக் கண்காணித்த போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில், அவா் வங்க தேச நாட்டைச் சோ்ந்தவா் என்பதும், கடவுச்சீட்டு, நுழைவு இசைவு இல்லாமல் போலி ஆதாா் அட்டை வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளா் சுபாஷ் தலைமையிலான போலீஸாா், ஜாபா் அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.