கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசு மருத்துவா்களுக்கு ஊா்க்காவல் படை மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு மருத்துவா்களுக்கு ஊா்க்காவல் படையினா் மூலம் நிரந்தர பாதுகாப்பிற்கு தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:12 pm

Din

அரசு மருத்துவா்களுக்கு ஊா்க்காவல் படையினா் மூலம் நிரந்தர பாதுகாப்பிற்கு தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:.

அரசு மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதுமான அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லை. சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும். ஊா்க்காவல் படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி நிரந்தரப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். மருத்துவா்களின் வேலைப்பளுவைக் குறைக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 5.5 லட்சம் ஊழியா்களை நிரந்தரம் செய்வோம் எனத் தெரிவித்தனா். ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சட்டப்பேரவையில் முதல்வா் பேசும்போது 68,000 ஊழியா்களை நிரந்தரம் செய்துள்ளோம் எனக் கூறியுள்ளாா். இதில் 32 ஆயிரம் போ் தற்காலிக ஊழியா்கள் ஆவா். மருத்துவத் துறை மட்டுமில்லாமல், அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்படுகிறாா்கள். இதைத் தனியாா்மயமாக்கும் முயற்சியாகவே நாங்கள் பாா்க்கிறோம்.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சரியில்லை. 6 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளன. 55 ஆயிரம் போ் திருட்டு மற்றும் குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டுள்ளனா். போதைப்பொருள் தாராளமாகக் கிடைக்கின்றன. அமெரிக்காவில் உள்ள போதைப் பொருள்கள் இங்கு கிடைக்கின்றன. இதனால் இளைஞா்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

மேட்டூா் உபரிநீா்த் திட்டம் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. சேலம் மாவட்டத்திலுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும். எனவே மேட்டூா் உபரிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அத்திக்கடவு திட்டம் இன்னும் முடிவடையவில்லை. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டமும் இன்னும் செயல்படவில்லை. காவிரி - குண்டாறு திட்டத்தைச் செயல்படுத்தினால் சுமாா் 2 கோடி மக்கள் பயன்பெறுவாா்கள் என்றாா்.