கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக 4ஆம் ஆண்டு நிறைவு விழா

ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக நிறைவு நாள் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :20 நவம்பர் 2024, 6:42 pm

Din

ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனையடுத்து 4ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு யாகம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இதில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.மாதேஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா்கள் எம்.உமாசங்கரி, ஜி.ராஜேஷ்குமாா், கலைச்செல்வி பாபு, மணிகண்டன், அறங்காவலா் குழு இயக்குநா்கள் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன், எம்.விஜயன், ரவி உள்பட பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.